தேவையான பொருள்கள்.
சீரக சம்பா அரிசி - 4 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கப்
லெமன் -1
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை
மட்டனில் கால்கப்தயிர், மஞ்சள்தூள்,, இஞ்சி, பூண்டு விழுது மற்றும்
ஒரு ஸ்பூன் உப்பு போட்டு 5விசில்வரும் வரை வேக வைக்கவும்.
பெரியவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைகீறி
வைக்கவும்.பூண்டைதனியாக
அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய்
இரண்டையும்சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டுவிழுதைப்போட்டுவதக்கவும். வெங்காயம்
2 நிமிடங்கள்வதங்கியதும்
மிளகாய்தூள் போட்டுவதக்கவும்.
5நிமிடங்கள்வதக்கிஎண்ணெய்பிரிந்ததும்நறுக்கியதக்காளியைச்சேர்க்கவும்.தக்காளிநன்றாகவதங்கிகூழானதும்தயிர்சேர்க்கவும்.
தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில்அரைத்து தண்ணீர்ஊற்றி
4 கப்
பால்எடுத்து வைக்கவும்.
தேங்காய்பால், மட்டன்வேக வைத்த தண்ணீர்இரண்டும்சேர்த்து
8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழைசேர்க்கவும்.
ஒருகொதிவந்ததும்அரிசியைபோட்டு
அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளரி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம்
சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.
பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை
கிளரி விட்டு பரிமாறவும் .சுவையான சீரக சம்பா மட்டன்பிரியாணிதயார்.