வறுத்து அரைத்த மீன் கறி
தேவையான பொருட்கள் :
மீன் – 500 கிராம்
தேங்காய் துருவல் – 3/4 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு – 20 பல்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சுக்கு – சிறிய துண்டு
ஓமம் – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாதூள் – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 3 இனுக்கு
நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
செய்முறை :
• மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் பிரவுன் நிறமானதும் சுக்கு(லேசாக தட்டிக் கொள்ளவும்) ஓமம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி பொடி வகைகள் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
• ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொண்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த கலவையில் மீதமுள்ள பூண்டு, கறிவேப்பிலை, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து உப்பு புளி காரத்தின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.
• மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
• குழம்பு நன்றாக கொதி வந்ததும் 7 நிமிடங்கள் அதிக தீயில் கொதிக்க விட்டு பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.
• சுவையான வறுத்தரைத்த மீன் கறி தயார்.
செட்டிநாடு மட்டன் குழம்பு - Chettinad Mutton Kulambu
தேவையான பொருட்கள் :
- மட்டன் (இளம் ஆட்டுகறி) 1/2 கிலோ
- சீரகம் - 1 டீஸ் ஸ்பீன்
- மிளகு - 1 டீஸ் ஸ்பீன்
- சோம்பு -1 டீஸ் ஸ்பீன்
- பட்டை - இரண்டு விரல் அளவு
- லவங்கம் - 1 டீஸ் ஸ்பீன்
- நட்சத்திர பூ - மூன்று துண்டு
- காய்ந்த மிளகாய் - 6
- இஞ்சி - பாதி உள்ளங்கை அளவு
- பூண்டு - பெரிய பூண்டு 2
- பச்சை மிளகாய் - 4 கீறியது
- கருவேப்பிள ை - தேவையான அளவு
- கொத்தமல்லி - தேவையான அளவு
- தக்காளி - 2 பெரியது, சின்னதாக இருந்தால் 3
- சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
செய்முறை
- இளங்கறியாக இருந்தால் அதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொஞ்சம் முத்தின கறியாக இருந்தால் தனியாக குக்கரில் போட்டு கொஞ்ச நேரம் வேக வைக்கவும்.
- (இளங்கறியை எப்படி கண்டுபிடிபபது. இளங்கறி என்பது பார்ப்பதற்கு ரோஸாக இருக்கும், முத்தின கறி என்பது சிகப்பாக இருக்கும். அதே போல ஆட்டு உடலில் மிகவும் ருசினான பகுதி என்பது ஆட்டின் முன் இரண்டு கால்களில் இருக்கும் சதை தான்)
- இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, நட்சத்திர பூ, காய்ந்த மிளகாய் அனைத்தையும போட்டு வாணலில் நன்றாக வதக்கவும், அது பொன் நிறத்தில் மாறியவுடன் . அதை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- பின்பு சின்ன வெங்காயத்தயும், தக்காளியைம் நன்றாக வதக்கி விட்டு அதையும் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் மண் சட்டு இருந்தால் அதை வைக்கவும், அப்படி இல்லை என்றால் சாதாரண அடிப்பிடிக காத பாத்திரத்த வைக்கவும்,
- எண்ணையை கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளவும், காரணம் ஏற்கனவே வதக்கிய பொருட்களில எண்ணை இருப்பதால் , எண்ணையை கொஞ்சமாக விட்டு விடவும்.
- முதலில் கருவேப்பில போடவும், அப்புறம் பச்சை மிளகாய் அப்புறம் அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை போடவும். கொஞ்ச நேரம் கழித்து தக்காளி வெங்காயம் அரைத்ததை போடவும். நன்றாக கிளறி விடவும். அதன் பின் கறியை போடவும்.
- கலருக்காக கொஞ்சம் மிளகாய் பொடியை தூவிக் கொள்ளலாம், மசாலா நன்றாக கறியில் ஏறும் வரை கறியை அடிபிடிக்கமல் கரண்டியால் புரட்டவும்
- அளவான தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் தாழ்வான நெருப்பை வைத்து விட்டு அரை மணி நேரம் வேக வைக்கவும், கறி பஞ்சு பஞ்சாக ஆகும் வரை.
- அதன் பின் தேங்காயை தேவையான அளவு 3 பத்தை எடுத்துக் கொண்டு அதை அரைத்து குழம்பில் போட்டு, கொத்தமல்லி யையும் கலந்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
- அருமையான காரமான சுவையான செட்டிநாட் டு மட்டன் குழம்பு ரெடி
பேச்சுலர்களுக்கான... மட்டன் பிரியாணி (Bachelor special mutton biryani)
பெரும்பாலான வீடுகளில் சிக்கன் பிரியாணியை செய்தாலும், பலருக்கு
மட்டன் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். ஏனெனில் மட்டன் கொண்டு பிரியாணி
செய்தால், அது மிகவும் சுவையுடனும், மணமாகவும் இருக்கும். இங்கு ஒரு
அருமையான மட்டன் பிரியாணி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
ரெசிபி சற்று கஷ்டமாக இருப்பது போல் இருந்தாலும், மிகவும் சுவையாக
இருக்கும்
மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மட்டன்
பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Special Mutton Biryani
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
புதினா - 1/2 கப்
தண்ணீர் - 2 கப் + 1 கப் மட்டனை வேக வைக்க
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலாவிற்கு...
கிராம்பு - 2
பட்டை - 1/4 இன்ச்
ஏலக்காய் - 1
சீரகம் - 1/4 டீஸ்பூன்
ஜாதிபத்ரி - 1 சிறியது
அன்னாசிப்பூ - 1
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
பிரியாணி இலை - 2
ஊற வைப்பதற்கு...
மட்டன் - 1/4 கிலோ
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து
இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மட்டனை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஊற
வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
அதே சமயம் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின்
வெங்காயம், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கிவிட்டு,
கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் மல்லி
தூள், மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக
வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
பின் குக்கரில் உள்ள விசிலானது போனதும், அதனை மீண்டும் அடுப்பில் வைத்து,
அதில் பிரியாணி மசாலா பொடி சேர்த்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை கிளறி
விட வேண்டும்.
அதற்குள் அரிசியை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
நீரானது வற்றியதும், அதில் கழுவி வைத்துள்ள அரிசி, கேசரி பவுடர், உப்பு
சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 1
விசில் விட்டு, தீயை குறைத்து 6-8 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால்,
விசில் போனதும் திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சுவையான மட்டன்
பிரியாணி ரெடி!!!
ஈஸியான... இத்தாலியன் பாஸ்தா!!!
பாஸ்தா உடலுக்கு மிகவும் சிறந்த உணவு, இது ஒரு இத்தாலியன் வகை
உணவுகளில் ஒன்று. இந்த உணவை உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள்
சாப்பிட்டால், நிச்சயம் குண்டாவார்கள். இத்தகைய பாஸ்தாவை எவ்வாறு செய்து
சாப்பிட்டால், சுவையாக இருக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை :
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய்
மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, தட்டைப் போட்டு மூடி, சிறிது
நேரம் வேக வைத்து, வெந்துள்ளதா என்று பார்த்து, பின் அதனை இறக்கி, நீரை
வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும்
குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது
நேரம் வேக வைக்கவும். பின் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப்
பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ்
விட்டு நன்கு கிளறவும்.
அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு,
நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும்.
இப்போது சுவையான ஈஸியான பாஸ்தா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும்
துருவிய சீஸ் போட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
சீசுவான் சில்லி பேபி கார்ன் (SCHEZWAN CHILLI BABY CORN)
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – 1/4 கப்
குடைமிளகாய் – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
சோள மாவு – 1 டேபிள்
ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
சீசுவான் சாஸ் செய்வதற்கு…
வரமிளகாய் – 30
பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சீசுவான் சாஸ் செய்யும் முறை:
முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்யும் முறை:
முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின், அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்ன்துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பேபி கார்ன் ரெடி!!!
ஸ்பைசி நண்டு மசாலா
தேவையான பொருள்கள்
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - 1 குழி கரண்டி
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ங்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
முங்திரி பருப்பு - 4
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - மல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதிவந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்
வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
கடாயில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா வாசனை போனவுடன் எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.
சூப்பர் நண்டு மசாலா ரெடி.
Tag : crab-curry-indian
முட்டை தக்காளி குழம்பு
தேவையானவை
முட்டை – 2
நாட்டுத்தக்காளி – 3
வெங்காயம் – 2
மஞ்சள்தூள், சோம்பு – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு – 4
தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சிக்கன் சுக்கா - Chicken Sukka
தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
கறிமாசால் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
மல்லி இலை - சிறிதளவு
பட்டை , கிராம்பு - சிறிதளவு
செய்முறை :
முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி கொள்ளவும்.
பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும்
பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு கடாயை மூடி நன்கு வேக விடவும்.
கோழி ஓரளவு வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் இறக்கி நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.
Tag : Chicken Sukka,sunday special,south indian food
பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா - Pepper Chicken Gravy
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
மிளகு - 20
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தணியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
மிளகைத் தூள் செய்து இஞ்சி ,பூண்டு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின்பு ஊற வைத்த சிக்கனை கடாயிலோ அல்லது குக்கரிலோ போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன்
இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்
பெப்பர் படடர் சிக்கன் மசாலா தயார்.
Tag : Pepper Chicken Gravy,NonVeg,Sunday Special
செட்டிநாடு சிக்கன் குழம்பு - Chettinad chicken kulambu
தேவையான பொருள்கள்
சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 4
மஞ்சள்பொடி - அரை ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 3 ஸ்பூன்
மல்லிப்பொடி - 4 ஸ்பூன்
அரைக்க
மிளகு - ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - 2
சோம்பு - அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து சிக்கனுடன் பிசறவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய சிக்கனை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்
Tag : Chettinad chicken kulambu, South Indian, Chicken Special
சோயா ஐஸ்கிரீம்
சோயா ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள்
சோயா பொடி – 1/4 கப்
முந்திரிப்பருப்பு – 1/4 கப்
பால் – 21/2 கப்
சீனி – 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 டீஸ்பூன்
கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சில துளிகள் (அ) ஏலக்காய், குங்குமப்பூ
சோயா ஐஸ்கிரீம் செய்முறை
சோயா சங்க்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இது தான் சோயா பொடி.
சோயா பொடியை 1/4 கப் பாலிலும், முந்திரிப் பருப்பை 1/4 கப் பாலிலும் ஊற
வைத்துக் கொள்ளவும். ஊறிய முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதோடு ஊற
வைத்த சோயாவையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஏலக்காய் வாசனை
விருப்பமுள்ளவர்கள், முந்திரி, சோயாவுடன் குங்குமப்பூ, ஏலக்காயையும்
சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீதியுள்ள 2 கப் பாலை 1 கப் ஆகும் அளவு
காய்ச்சி வைத்துக் கொள்ளவும். கார்ன் ஃப்ளாரை சிறிது ஆறிய பாலில் கரைத்து
காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்றாகக் கொதித்த பின் இறக்கி வைத்துக்
கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். பாலுடன் அரைத்த சோயா முந்திரி
விழுது, கிரீம், பொடித்த சர்க்கரை இவற்றை சேர்த்து சிறிது கொதிக்க விட்டு,
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து நன்கு கலந்து கொள்ளவும்.
வெனிலா ருசி விரும்பினால் வெனிலா எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் 1 மணி நேரம்
வைக்கவும். பின் அதை ஃப்ரீசரில் இருந்து எடுத்து திரும்பவும் மிக்ஸியில்
போட்டு அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட்
செய்யவும். ஐஸ்கிரீம் செட்டானவுடன் எடுத்து பரிமாறவும்.
சாக்கோ நட் ஐஸ்கிரீம்
தேவையான
பொருட்கள்
பால் -
1 கப்
கிரீம் -
3 கப்
முட்டை வெள்ளை - 6
பாதாம் பருப்பு -
4
பொடித்த சர்க்கரை - 7
டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 2
டீஸ்பூன்
கொக்கோ பவுடர் - 2
டேபிள் ஸ்பூன்
செய்முறை
பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
6 முட்டையின் வெள்ளையை எடுத்துக் கொண்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.
சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து நுரைக்க கலக்கவும்.
பாலையும் கொக்கோ பவுடரையும் கலந்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியாக ஆகும் வரை கிளறவும்.
கிரீமை நன்றாகக் பீட் செய்து பால் கலவையுடன் கலக்கவும்.
எசன்ஸையும் கலந்து மெதுவாக கலக்கவும்.
அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையையும் கலக்கவும்.
எல்லாக் கலவையையும் ஒன்றாகக் கலக்கவும்.
இந்தக் கலவையை ஃப்ரிஸரில் வைத்து பாதி கெட்டியானதும் வெளியே எடுக்கவும்.
(உடைத்து வைத்துள்ள பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் வறுக்கவும்).
அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து திரும்பவும். ஃப்ரிஸரில் வைத்து செட் செய்யவும்.
கத்தரிக்காய் பச்சடி
கத்தரிக்காய் பச்சடி தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 2 பெரியது
உருளைக்கிழங்கு - 1 மீடியம்
பச்சை மிளகாய் - 5 கீறியது
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் பொடி - சிறிது
புளி - சிறிய எலுமிச்சையளவு
கத்தரிக்காய் பச்சடி தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கத்தரிக்காய் பச்சடி செய்முறை
முதலில் பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயையும் உருளைக்கிழங்கையும் சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக்
கொள்ளவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய்,
வெங்காயம் முதலியவற்றை வெந்த பருப்பில் போட்டு வேக விடவும். நன்கு
வெந்ததும் புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக ஒரு
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து
போடவும். இது இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட
நன்றாக இருக்கும்.
தூதுவளை துவையல்
தூதுவளை துவையல் தேவையான பொருள்கள்
தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 இஞ்
சிறிய வெங்காயம் - 10 தோலுரித்ததும்
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
புளி - கோலிக்குண்டு அளவு
தேங்காய் - 2 ஸ்பூன் துருவியது
உப்பு - தேவையான அளவு.
தூதுவளை துவையல் செய்முறை
லஸ்ஸி
தேவையானவை:
புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்.
ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன்.
சர்க்கரை - 50 கிராம்.
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.
செய்முறை:
புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, க்ரீம் சேர்த்து அரைத்து ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறவும்.
லெமன் சர்பத் - Lemon Juice
தேவையானவை:
எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்.
உப்பு - 1/4 ஸ்பூன்.
தண்ணீர் - 1 தம்ளர்.
நன்னாரி எசன்ஸ் - 1 துளி.
செய்முறை:
தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இவற்றில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ் சேர்த்து குளிர வைத்துப் பின் அருந்தவும்.
தக்காளி ஜீஸ் - Tomato Juice
தேவையானவை.
தக்காளி - அரை கிலோ.
தண்ணீ ர் - 2 கப்.
சர்க்கரை - கால் கப்.
லெமன் - தேவைக்கு.
கொத்தமல்லி - சிறிதளவு.
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை:
தக்காளியைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 4 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 2 கப் தண்ணீ ர், கால் கப் சர்க்கரை, லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
Tag : tomato juice,summer,tamil
ஜிஞ்சர் ஜீஸ்
ஃப்ருட் மிக்சர் ஜீஸ்
தேவையானவை
தேவையானவை
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் ஜீஸ் - 5 கப்.
ஆரஞ்சு ஜீஸ் - 2 கப்.
இஞ்சி ஜீஸ் - 1 ஸ்பூன்.
சில்சோடா - 4 கிளாஸ்.
கமலா ஆரஞ்சு சுளை - அரை கப்.
ஆப்பிள் துருவல் - அரை கப்.
பைனாப்பிள் - அரை கப்.
சர்க்கரை - 3/4 கப்.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
பைனாப்பிள், ஆரஞ்சு, இஞ்சி ஜீஸ்களைக் கலக்கவும். இத்துடன் சில்சோடா, கமலா ஆரஞ்சு, பைனாப்பிள் துண்டுகள் ஆப்பிள் துருவல், சர்க்கரை, உப்பு கலந்து பரிமாறவும்.
யோகர்ட் சாலட்
தேவையானவை
தயிர் - 1 கப்.
ஸ்ட்ரா பெர்ரி - 1 கப்.
சர்க்கரை - 50 கிராம்
ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் - 1 துளி
செய்முறை:
பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் எசன்ஸ் சேர்த்த தயிரில் பழக்கூழை கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.
Tag : yogurt salad
பைனாப்பிள் ஜுஸ் - Pineapple Juice
தேவையான பொருள்கள்
அன்னாசிப்பழம் -1
சா்க்கரை -தேவைக்கேற்ப
தண்ணீர்-1லிட்டர்
சிட்ரிக்அமிலம் -2கிராம்
கலர் பொடி -1/2 ஸ்பூன்
எசன்ஸ் -கால் ஸ்பூன்
செய்முறை பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் .
பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.
மேலும் சா்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டிய சாறுடன் கலந்து கொள்ளவும். சிட்ரிக் அமிலத்தையும் சிறிது தண்ணீரில் கலந்து சாற்றில் சோக்கவும்.
அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும் கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகா வண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..
Tag : pineapple juice,Summer,Tamil
Subscribe to:
Posts (Atom)