கப்ப கிழங்கு (மர வள்ளி கிழங்கு) - கால் கிலோ
தாளிக்க
தேங்காய் எண்ணை - 4 தேக்கரண்டி
கடுகு – அரைட் தேக்கரண்டி
சோம்பு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 ஆர்க்
பூண்டு - முன்று பல்
இஞ்சி - பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி - ஒன்று
பச்ச மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் – அரை கப்
கொத்துமல்லி தழை – சிறிது
கொடம்புளி – 4
செய்முறை
கொடம்புளியை கழுவி சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
மரவள்ளி கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக கட் செய்து சிறிது உப்பு மிளகாய் தூள் , மிளகு தூள் சேர்த்து வேகவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணை ஊற்றி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து
மசாலாவகைகள் மற்றும் குடம்புளி சேர்த்து மசலா வாடை அடங்கியதும் வெந்த
கிழங்கு சேர்த்து நன்கு சுருள கிளறவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க
விடவும்.
தேங்காயை அரைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
கவனிக்க:
கேரள மக்கள் புளிக்கு பதில் கொடம்புளி பயன்படுத்துவார்கள்.
இதில் தேங்காய் எண்ணையில் தாளிப்பதும் கொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம்.