காரைக்குடி மீன் குழம்பு / karaikudi meen kulambu

 meen kulambu க்கான பட முடிவு

தேவைாயன பொருள்கள்

மீன்-   அரை கிலோ
தேங்காய்  - அரை மூடி
மிளகு-  1  ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
புளி-எலுமிச்சை பழ அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-2  ஸ்பூன்
தனியாத்தூள்- 3  ஸ்பூன்
மஞ்சள் தூள்-  கால் ஸ்பூன்
நறுக்கிய  வெங்காயம்  - 2
தக்காளி நறுக்கியது  - 3
பூண்டு  -  10 பல்
மல்லி  இலை -  சிறிதளவு
நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
கடுகு-  1 ஸ்பூன்
வெந்தயம்-  1  ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு


செய்முறை

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

புளியை  தண்ணீரில் கரைத்து  வைத்து கொள்ளவும்.

தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக   அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்   ஊற்றி  சிறிதளவு  சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் பூண்டு, வெங்காயம்,  இஞ்சி பூண்டு விழுது,    சேர்த்து  2  நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன்  பச்சை மிளகாய்  , தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள  தேங்காய்  விழுது   தேவைாயான அளவு தண்ணீர்    சேர்த்து   நன்கு கொதிக்க விடவும். 

குழம்பு  ஒரளவு கெட்டியானவுடன் மீன்  சேர்த்து 10 நிமிடம்  கொதிக்க விட்டு   மல்லி இலை கறிவேப்பிலை  போட்டு  இறக்கவும்

சுவையான காரைக்குடி மீன்குழம்பு ரெடி

செட்டிநாடு மிளகு நண்டுக் குழம்பு / chettinad milagu nandu kulambu


nandu kulambu க்கான பட முடிவு


தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 4
காய்ந்த   மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
இஞ்சி - சிறிது
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1ஸ்பூன்

மிளகு - 3  ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
நல்லெண்ணெய் - குழிகரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
சோம்பு  - சிறிதளவு

செய்முறை:

நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில்  மஞ்சள் தூள் போட்டு  பிரட்டி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன  வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.


கடாயில்  எண்ணெய்  விட்டு    தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில்நறுக்கிய  வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

இதில் அரைத்து தேங்காய் விழுது   சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.

ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval

andhra fish fry க்கான பட முடிவு


தேவையான பொருள்கள்

வஞ்சிரம் மீன் -  அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு  -   2 ஸ்பூன்
எண்ணெய்பொரிக்க   - தேவையான அளவு


செய்முறை


மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்பு   மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு  அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து மசாலா ரெடி பண்ணி கொள்ளவும்.

இப்போது மீன் துண்டுகளை எடுத்து மசாலாவில்  நன்கு தடவி  அரை  மணி  நேரம்   அதை ஊற வைக்கவும். 

பின்கடாயில்   எண்ணெய்   ஊற்றி   காய்ந்ததும்   மீன் துண்டுகளை போட்டு இருபக்கமும் திருப்பி  போட்டு  வறுத்து எடுக்கவும்.   சுவையான    காலமான  ஆந்திர மீன் வறுவல்   ரெடி.

Fish Fry in andhra Style...